மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று (ஜூலை 21) ஒரு பெண் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டடது. இதில், பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்ர. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.