அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 3 பேர் பலி (வீடியோ)

61பார்த்தது
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இன்று (மே 24) பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீசைலம் நெடுஞ்சாலையில் தெலங்கானா மாநில அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் அப்பளம் போல் நெருங்கியதால் உயிரிழந்தவர்களின் உடலை ஜேசிபி கொண்டு போலீசார் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்த சிவகிருஷ்ண வரபிரசாத் கவுட் (35), மேகாவத் நிகில் (26), புர்ரா மணிதீப் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி