போதையில் ரகளை செய்த பஸ் கண்டக்டர்

65பார்த்தது
போதையில் ரகளை செய்த பஸ் கண்டக்டர்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மது அருந்திய வாலிபர் ஒருவர், மது போதையில் சாலையில் அமர்ந்து போவோர், வருவோரிடம் ரகளை செய்து கொண்டிருந்தார். அத்துடன் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் இருந்தார். இந்நிலையில் போலீசார், அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர் அதை கேட்காமல் தன்னை அப்புறப்படுத்த வந்த போலீசாரின் கைகளை தட்டிவிட்டார். பின்னர் போதையை தெளியவைத்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனியார் பஸ் கண்டக்டர் என்பதும், மது போதையில் ரகளை செய்ததும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி