கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் என பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். அதே சமயம் அவ்வப்போது இருவரும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராமபுரத்தில் வீட்டில் பூஜை செய்ய சென்ற பூசாரி தனது உதவியாளர்களுடன் சேர்ந்து 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் போக்சோ சட்டத்தில் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பூசாரி ஹரிஷ், உதவியாளர்கள் சதீஷ்குமார், விஜி (எ) ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.