கும்பகோணம்: குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்ட பாமக வேட்பாளர்

3007பார்த்தது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் வாக்களித்தார்.

கும்பகோணம் அருகே உள்ள மேல மருத்துவக்குடியில் உள்ள ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வாக்கு சாவடியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

விவசாயி ஆகிய நான் வேட்பு மனு தாக்கல் செய்தபோது விவசாயியாக வந்து வேட்ப மனு தாக்கல் செய்தேன். தற்போது விவசாய ஆராய்ச்சி மையமான ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்முறையாக வாக்கு மையம் அமையப்பெற்று அதில் முதல் வாக்காளராக எனது ஓட்டினை பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தேசத்தை வளர்ச்சி பாதையில் மேலும் பெருமை கொள்ளச் செய்வார். அந்த வகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு வெற்றி பெற்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற பணியாற்றுவேன் என்றார்.

நெல் ஆராய்ச்சி நிலையத்தில் முதன்முதலாக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி