கும்பகோணம்: செல்போனை பறித்து ஓடும் சிசிடிவி காட்சி

1558பார்த்தது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர், நாகை, காரைக்கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பணிமனை அருகே இரவு ஒருவர் தனியாக அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள், செல்போனில் ஒருவர் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நோட்டமிட்டபடி சென்றனர்.

சிறிது தூரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் மட்டும் கீழே இறங்கி வந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் அருகில் சென்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கியபடி தயார் நிலையில் இருந்த நபருடன் தப்பி ஓடினார். அவர்களை செல்போன் உரிமையாளர் விரட்டி பிடிக்க முயன்றும் சிக்காமல் தப்பி சென்று விட்டனர்.

நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த கடையின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்துள்ள இந்த துணிகர வழிப்பறி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி