புதுப்பட்டி கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். பின்னர் பூதலூர் நான்கு சாலை பகுதி, கோவில்பத்து, விண்ணமங்கலம், பூதராயநல்லூர், ஒரத்தூர், மேகளத்தூர், மாறனேரி, ஆற்காடு, ஒன்பத்துவேலி, மைக்கேல்பட்டி, பவனமங்கலம், விஷ்ணம்பேட்டை, அலமேலுபுரம் பூண்டி, கோவிலடி, கல்லணை உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருக்காட்டுப்பள்ளியில் நிறைவு செய்து வாக்குகள் சேகரிக்க பிரச்சாரம் செய்தார். என்னால் பல்வேறு நலத்திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டுவர முடியும். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து இந்த தொகுதிக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும் என்றார். பிரச்சாரத்தின் போது பாஜக மாநில விவசாய அணி செயலர் பூண்டி எஸ். வெங்கடேசன், மாவட்டச் செயலர் தங்க கென்னடி, அமமுக மாநில வழக்கறிஞர் அணி செயலர் வேலு. கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ஜி எம் சுப்பிரமணியம், தமமுக தியாக. காமராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் அருணகிரி மற்றும் திரளான கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர்.