ராஜஸ்தானில் இன்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பாலியில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது. இதில் எவ்வித பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. கூடுதல் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.