ஏப்.15 – 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

45899பார்த்தது
ஏப்.15 – 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் 4 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.15 - 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.22, 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஏப்.15 – 19 வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி