தூத்துக்குடியில் இருந்து ரயிலில் 930 டன் உரம் தஞ்சை வந்தது

61பார்த்தது
தூத்துக்குடியில் இருந்து ரயிலில் 930 டன் உரம் தஞ்சை வந்தது
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர எள், உளுந்து, வாழை, கடலை போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் இந்த நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நெற்பயிர் தேவைக்காக தூத்துக்குடியில் இருந்து 690 டன் பொட்டாஷ் உரம், 240 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 930 டன் உரம் சரக்கு ரயில் மூலம் நேற்று தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி