புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ. பள்ளி ஆண்டு விழா

79பார்த்தது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி. பி. எஸ். இ. பள்ளி 11-ஆம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆனந்த் ஆண்டறிக்கை படித்தார். இதையொட்டி பட்டமளிப்பு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல்கலாமின் பேரனும் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் தேசிய அறக்கட்டளையின் நிறுவனருமான சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10-ம் வகுப்பில் 450-க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு நீட், ஜே. இ. இ. பயிற்சிகள் தங்கள் அறக்கட்டளையின் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். கவிஞர் நந்தலாலா சொற்பொழிவு ஆற்றினார். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அதிராம்பட்டிணம் நகராட்சி தலைவர் தாஹிரா அப்துல் கரீம், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் மலைஅய்யன், அதிராம்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் ராமகுணசேகரன், மழவேனிற் காடு ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் சையத் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி