குரு பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

61பார்த்தது
குரு பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் குரு பரிகார தலமாகும். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி குரு பகவானாக தனிச் சன்னதி அமையப்பெற்று அருள் பாலித்து வருகிறார். இன்று(மே 1) மாலை 5:19 மணியளவில் குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு காலை முதலே லட்சார்ச்சனை, அபிஷேகங்கள் நடந்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இடப்பெயர்ச்சிக்கு பின்னர் குரு பகவானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்தி