தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கும் போர் - பிரேமலதா விஜயகாந்த்

2567பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகே தேமுதிக வேட்பாளர் பெ. சிவநேசனை ஆதரித்து புதன்கிழமை இரவு தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரும் பாடமாக இருக்க வேண்டும். பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நட வடிக்கை எடுக்கப்படும். தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக் கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். கொப்பரை, நெல்லுக்கு ஆதார விலை உயர்த்தப்படும் என்றார்.

பிரசாரத்தில், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலர் சி. வி. சேகர், முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். வி. திருஞானசம்பந்தம், மா. கோவிந்தராசு, தேமுதிக மாவட்ட செயலர் பழனிவேல், அதிமுக ஒன்றியச் செயலர் கோவி. இளங்கோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி