குழந்தையின் கையில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர தந்தை கைது

2949பார்த்தது
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (31). இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 4 வயதில் தனிகஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். சிவரஞ்சனி மலேசியாவிற்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியம் அவ்வப்போது குழந்தையின் கைகளில் பிளேடால் கீரியும், சிகரெட்டால் சுட்டும் குழந்தையை துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார்.

இதைப் பார்த்த சிவ ரஞ்சனி வேதனையில் துடித்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிவரஞ்சனி இதுபற்றி அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த அதிரை போலீசார் கீழத்தோட்டம் சென்று பாலசுப்ரமணியத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் மனைவியை ஊருக்கு வர வைப்பதற்கு இது போன்று குழந்தையை துன்புறுத்தியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பாலசுப்பிரமணியம் மீது போலீசார் வழக்குபதிந்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி