கஞ்சிமேடு ஸ்ரீ செல்வமகா காளியம்மன் ஆலய பால்குடம் திருவிழா

66பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கஞ்சிமேடு  கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வ மகா காளியம்மன் ஆலய 19ஆம் ஆண்டு பால்குட  திருவிழா  நடைபெற்றது. முன்னதாக  குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து முக்கிய வீதிகள் வழியாக  கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கஞ்சிமேடு மற்றும் அதனை  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கஞ்சமேடு செல்வ மகா காளியம்மன் திருக்கோயில் அறக்கட்டளையினர். விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள், நாட்டான்மைகள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி