அய்யம்பேட்டை   மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

77பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை ஒத்ததெரு, சுண்ணாம்புகார தெருவில் அமைந்துள்ள  அருள்மிகு மகா மாரியம்மன் மற்றும்  பரிவார தெய்வங்களாகிய ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன் ஆலய புணராவர்த்தன, ஜிர்ணோத்தாரன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகாபூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பட்டு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலாலய  கும்பாபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  
விழா ஏற்பாடுகளை அய்யம்பேட்டை,
ஒத்ததெரு, சுண்ணாம்பு கார தெருவாசிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி