கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் நலசங்க விழா

59பார்த்தது
கும்பகோணம் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் நலசங்கத்தின்,
28ம் ஆண்டு புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 2024-25ம்
ஆண்டின் 24வது தலைவராக பொறியாளர் அன்பரசன் பொறுப்பேற்றுக்கொண்டார். செயலாளராக பொறியாளர் கிருஷ்ணகுமார், பொருளாளராக பொறியாளர்க்ஷமணிகண்டன்
ஆகியோரும் பணியேற்று கொண்டனர். உடனடி முன்னாள்
தலைவர் பொறியாளர் நக்கீரன் வரவேற்புரை வழங்கினார்.
நிர்வாக செயலாளர் பொறியாளர் அனந்தராமன் ஆண்டறிக்கை
வாசித்தார். நிகழ்வில் மண்டலம் 11ன் தலைவர் பொறியாளர் சுந்திரமூர்த்தி 2024-25ம் ஆண்டிற்கான புதிய
நிர்வாகிகளை பணியமர்த்தியும், நலசங்க அறக்கட்டளை தலைவர்
எழிற்கலைஞர் முகமது ரஃபி புதிய உறுப்பினர்களை
நலசங்கத்தில் இணைத்தும் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராக நலசங்க சாசன தலைவர் பொறியாளர் கோமகன் பங்கேற்று
சிறப்புரையாற்றினார். மண்டல செயலாளர் பொறியாளர் வேல்முருகன், JAC-JCl INDIA தேசிய துணைத்தலைவர் பொறியாளர் காளிதாஸ், பொறியாளர் லியோன், அகில இந்திய கட்டுநர் வல்லுநர்கள்
சங்க கும்பகோணம் மையத்தின் தலைவர் பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியை பொறியாளர் வின்சென்ட் பிரபாகரன் குழுவினர்
தொகுத்து வழங்கினார்கள். முடிவில் பொறியாளர் கிருஷ்ணகுமார்
நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி