மகாமகம் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்குகிறது

64பார்த்தது
கும்பகோணத்தில் அதிமுக மகாமகம் பகுதி கழகம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மகாமகம் பகுதி செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் மாநகர செயலாளர் ராம. ராமநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் பாரதிமோகன் கலந்து கொண்டு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக்குமார், கும்பகோணம் மாநகர அம்மா பேரவை செயலாளர் ஆயூப்கான், பகுதி துணைச் செயலாளர் ஜான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் அறிவொளி,
பகுதி பிரதிநிதிகள் கண்ணன், மகேஸ்வரி, சுப்பையன் மற்றும் செல்வம், முத்துவேல், இளந்திரையன், நவீன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி