ஜூன் 10ஆம் தேதி பாடப்புத்தகம் வழங்கப்படும்

24948பார்த்தது
ஜூன் 10ஆம் தேதி பாடப்புத்தகம் வழங்கப்படும்
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய நாளே பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள், காலுறைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கும், புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி