டிராக்டர் குளத்தில் பாய்ந்து 12 பேர் பலி

78984பார்த்தது
டிராக்டர் குளத்தில் பாய்ந்து 12 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிபயங்கர சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் பாய்ந்து விபத்து நடந்துள்ளது. மெயின்புரி - படாயூன் நெடுஞ்சாலையில் தரியாவ்கஞ்ச் அருகே கங்கையில் நீராடச் சென்ற பக்தர்களின் டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளத்தில் பாய்ந்தது. இறந்தவர்கள் எட்டாவின் ஜெய்த்ரா பகுதியில் உள்ள கிரியா பனராகாசா கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி