தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த டேவிட் மாலிக் என்பவர் ஆறு ஏழு எட்டு வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வருகிறார் இந்த நிலையில் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவிகளுக்கு அய்யப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் நல ஆலோசனை அதிகாரி அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அய்யப்பனை கைது செய்தனர்.