ரோடு போடுவதில் மோதல் 3 பேர் கைது: 2பேருக்கு வலை

526பார்த்தது
ரோடு போடுவதில் மோதல் 3 பேர் கைது: 2பேருக்கு வலை
சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை கொழுந்து புரம் பகுதியில்; ரோடு போடும் வேலை நடந்து வருகிறது.

இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் ரோடு போடும் இடத்தில் தனக்கும் இடம் உள்ளதாக பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அப் பகுதியை சேர்ந்த சுடலி என்பவர் காவல் நிலையத் தில் புகார் கொடுக்க சென்றபோது கணேசனும் உடன் சென்றுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மீனாட்சி சுந்தரம், அவரது அம்மா பெருமாள் மற்றும் அவரது மனைவி கமலா ஆகியோர் சேர்ந்து கணேசனின் அப்பாவிடம் சென்று பிரச்சனை செய்து அதை தடுக்க வந்த கணேசனை செங்கல் மற்றும் கம்பால் தாக்கியதால் கணேசன் மற்றும் அவரது அப்பா சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ள னர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சார்பு ஆய்வாளர் கணபதி செல்வம் விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, திருமலை கொழுந்து புரம் மேலத் தெருவை சேர்ந்த மீனாட்சி
சுந்தரம்(54), அவரது மனைவி கமலா(48) அவரது அம்மா பெருமாள்(75) மற்றும் கணேசன்(31) அவரது அப்பா சிதம்பரம்(67) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து,

மீனாட்சி சுந்தரம்(54), கமலா(48) பெருமாள்(75) ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி