கோயிலுக்குள் தீ விபத்து: அர்ச்சகர் உடல் கருகி பலி (வீடியோ)

71பார்த்தது
கேரள மாநிலம் கிளிமானூர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அர்ச்சகர் உடல் கருகி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சகர் ஜெயக்குமார் (49), ஒரு அறையை விளக்குடன் சென்று திறந்து போது, திடீரென அவர் மீது தீப்பிடித்துள்ளது. இதையடுத்து, தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேஸ் கசிவுதான் தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றி :NDTV

தொடர்புடைய செய்தி