வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்

20574பார்த்தது
வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்
வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 -5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 - 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி