பரபரப்பில் தமிழகம்.. ஹை அலர்ட்

75பார்த்தது
பரபரப்பில் தமிழகம்.. ஹை அலர்ட்
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக அதிகளவிலான லாட்ஜுகள் இருக்கும் சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி