ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. குடும்பங்களுக்கான நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படம் வரும் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.