அரசு பள்ளிகளுக்கு சர்ப்ரைஸ்.. அசத்தல் அறிவிப்பு!

63681பார்த்தது
அரசு பள்ளிகளுக்கு சர்ப்ரைஸ்.. அசத்தல் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனாவிற்கு பின் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே போவதால் அதை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் சிறந்த மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி