கிளாம்பாக்கம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

63பார்த்தது
கிளாம்பாக்கம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளை முதல் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இன்று பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரிய பிரச்னைகளை எல்லாம் சரிசெய்துவிட்டோம். குறைகளை யார் சொன்னாலும் சரி செய்வோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி