வேட்புமனு இல்லாமல் வந்த தங்க தமிழ்ச்செல்வன்

51பார்த்தது
வேட்புமனு இல்லாமல் வந்த தங்க தமிழ்ச்செல்வன்
வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளான நிலையில் தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் மூர்த்தி உடன் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்தார். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இரண்டு வாகனங்களை மட்டும் உள்ளே அனுப்பினர். பின்னர் அங்கே சென்ற பின்புதான் தங்க தமிழ்செல்வனுக்கு தெரிந்தது தனது வேட்புமனுவை உள்ளே அனுமதிக்கப்படாத தனது காரில் வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்று. வேட்பு மனு இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிலையில் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் உதவியாளர்களை அனுப்பி வேட்புமனுவை எடுத்துவர சொல்லி பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்தி