யாசகர்களுக்கு வழங்க இருந்த கெட்டு போன உணவுகள் பறிமுதல்

55பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளார் நளன் தீர்த்தப் பகுதியில் யாசகர்களுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்யப்பட்டு வந்த உணவுகள் கெட்டுப்போய் இருப்பதாக இன்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விற்பனைக்கான வைக்கப்பட்டு இருந்த உணவுகளை சோதனை செய்தனர். அப்போது அனைத்து உணவுகளும் கெட்டுப்போய் இருந்தது தெரியவந்த நிலையில் அவற்றை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து, உணவுகள் விற்பனை செய்த கடைகளை எச்சரித்துச் சென்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி