ஆம்ஸ்ட்ராங் வழக்கு - விஜயகாந்தை சுட்டிக்காட்டி வாதம்

551பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் வழக்கு - விஜயகாந்தை சுட்டிக்காட்டி வாதம்
ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால் அனுமதி மறுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதில் வாதம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி