நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் பேசும் போது, “நெல்லையில் ஆணவக்கொலைகள், சாதி ரீதியிலான கொலைகள் தொடர்கின்றன. நெல்லை மாவட்ட நிர்வாகம் சி.பி.எம். அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்றார்.