மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வயதான தாயை தனது மனைவியுடன் சேர்ந்து மகன் தாக்கியுள்ளார். மூதாட்டி தன் மகனால் கழுத்தை நெரித்து சித்திரவதைக்கு ஆளானார். அடிக்காதே என்று கெஞ்சினாலும் அவர்கள் மனம் இரங்கவில்லை. வயதான தாயை சித்திரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.