அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரையில் ஒருவர் பலி

586பார்த்தது
அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரையில் ஒருவர் பலி
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது தென்மாவட்டங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம் (60) என்பவர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி