சிவகாசி வெடி விபத்து: ஆளுநர் இரங்கல்

564பார்த்தது
சிவகாசி வெடி விபத்து: ஆளுநர் இரங்கல்
சிவகாசி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், ”சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி