10 கிராமங்களுக்குமான முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர்தகவல்

60பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், கடந்த 11. 07. 2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 19. 07. 2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட முத்தனேந்தல், வாகுடி, வெள்ளிக்குறிச்சி, பெரும்பச்சேரி, ராஜகம்பீரம், கால்பிரவு, மிளகனூர், அன்னவாசல், குவளைவேலி, தீத்தான்பட்டி, அரசகுளம், கட்டிக்குளம், விளாத்தூர், தஞ்சாக்கூர், பெரிய ஆவரங்காடு, சுள்ளான்குடி ஆகிய கிராமங்களுக்கென இராஜகம்பீரம், மதுரை – ராமேஸ்வரம் மெயின்ரோடு, எம். ஜே கல்யாண மண்டபத்திலும் மற்றும் திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட வடமாவளி, காட்டாம்பூர், கருங்குளம், பிராமணம்பட்டி, திருக்கோஷ்டியூர், சுன்னம்பிரப்பு, ஆலம்பட்டி, கருப்பூர், மாதவராயன்பட்டி, திருக்காலப்பட்டி ஆகிய கிராமங்களுக்கென காட்டாம்பூர் சமுதாயக்கூடத்திலும், காலை 10. 00 மணி முதல் பிற்பகல் 03. 00 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதுஎன ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி