மாவட்டத்தில் 346 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

60பார்த்தது
சிவகங்கை நகரில் 15 விநாயகர் சிலைகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 346 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, பாஜகவினரால் இன்றுபிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா என்பது நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதில், பொது வெளி மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்த பின்னர் அரசு அறிவித்துள்ள நீர் நிலைகளில் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைக்கப்படும் நிகழ்வு திரளான பக்தர்கள் பங்கேற்புடன் மிகப்பெரிய திருவிழாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழா, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் முன்னெடுத்து நடத்துகின்றனர். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்துக்காக 346 இடங்களில் விநாயகர் உருவச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதில் சிவகங்கை நகரில் சிவன்கோயில் திடல், காளவாசல், திருப்பத்தூர் சாலை ஆவரங்காடு தேவர் சமாதி, ஜெ. பி. திரையரங்கம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, உழவர் சந்தை, வாரச்சந்தை சாலை, ரயில்நிலையம், கொடிக்காடு, ரயில்வேகேட் இந்திராநகர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் விழாக்குழு, நிர்வாகிகள், எம். ஆர். உதயா, பாலா, சதீஷ், மணிகண்டன், மனோகரன், நாகேஸ்வரன், ராவின், சிவா, சக்தி, கருப்பையா, பிரகாஷ், தெய்வேந்திரன் உள்ளிட்ட பாஜக, இந்துமுன்னணி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி