தனிநபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி கோரிக்கை

61பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்திபுரம் 1வது வீதி மேட்டு தெருவில் ஒரு சமூகத்தினருக்கு ஒதுக்கி கொடுத்த இடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் தனிநபருக்கு அரசு அதிகாரிகள் பட்டா வழங்கியதாகவும் அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்து தனிநபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென இன்று மதியம் சுமார் மூன்று முப்பது மணி அளவில் ஆட்சியராகப் பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி