மகளை அடித்துக் கொன்ற சித்தி (வீடியோ)

68807பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவுரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பில்ஹவுர் கிராமத்தில் 9 வயது சிறுமியை அவரது சித்தி பர்சானா அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், புல்வெளியில் வீசப்பட்டிருந்த சிறுமியின் உடலை பார்த்து தந்தை கதறி அழுதார். அப்போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி