வெறும் கைகளில் சாக்கடையை அகற்றும் பணியாளர்கள்

64பார்த்தது
கோவை மாநகராட்சியில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், தூய்மைப் பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “கோவையில் ஏற்பட்டுள்ள மழை காரணமாக தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில், கோவை 45வது வார்டில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மைப் பணிகள் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி