அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள இரண்டு இடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவு ஆகியுள்ளதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இரண்டு குடியிருப்புகளில் மொத்தம் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ஜோலியட்டில் உள்ள காவல்துறைத் தலைவர் பில் எவன்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில், 23 வயதான நான்ஸ் என்ற இளைஞர், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்களால் அமெரிக்க மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.