மூத்த அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்

82பார்த்தது
மூத்த அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் பிரிந்தது. 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். காகாதேக என்கிற கட்சியின் நிறுவனர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முக திறமையுடன் அறியப்பட்டு வந்த குமரி ஆனந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி