மதுரை பழங்காநத்தம் தனியார் சூப்பர் மார்க்கெட் வாசலில் பெண் ஒருவர் கறிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில்
வேலை செய்யும் வாலிபர் ஒருவர், கறியை கழுவி அருகில் இருந்த வாளியில் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று வாளியில் இருந்து கறியை தூக்கிக்கொண்டு ஓடியது. அதனை கண்ட வாலிபர், நாயை துரத்திச் சென்று பிடித்து அதனிடமிருந்து கறியை பிடுங்கி வந்து மீண்டும் விற்பனைக்கு வைத்துள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி: Polimer