செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ பதிவு செய்த 4 சிறார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கபப்ட்ட மாணவியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு சிறார்களை கைது செய்த போலீசார், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.