பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி... தொழிலாளி மர்மச் சாவு

59பார்த்தது
பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி... தொழிலாளி மர்மச் சாவு
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள சின்னஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 35). தறித்தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்குள் கருத்து வேறு ஏற்பட்டு பிரிந்தனர். இதனிடையே கலைவாணி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் சின்னபையன் 2-வதாக சங்கரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் சின்னபையனை பிரிந்து சென்றுவிட்டார். இதனால், மனவேதனையடைந்த அவர் அதிக அளவில் மது குடிக்க தொடங்கினார்.

சம்பவத்தன்று அவர் மது குடித்துவிட்டு வீட்டில் படுத்து கிடந்தார். மறுநாள் மாலை அவரது அண்ணன் தேவராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சின்னபையன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து சென்று சின்னபையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி