தீரன் சின்னமலையின் 268வது பிறந்த நாளையொட்டி இன்று காலை சேலம் குரங்குச்சாவடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய பேரவை சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கொங்கு சமுதாயத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.