இடங்கணசாலையில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

63பார்த்தது
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மணி சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் விலைகாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும்

இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் விசைத்தறி தொழில் நம்பியுள்ள மக்கள் சூரத்திலிருந்து வரும் போலியான சேலை ரகங்களால் பட்டு சேலை விற்பனை இடங்கணசாலை பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் வெற்றி பெற்றால் இது குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து விசைத்தறி தொழிலே மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை பூர்த்தி செய்ய பாடுபடுவேன் எனவும் பொதுமக்களிடத்தில் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு MGR வேடமணிந்த ஒருவருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உட்பட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி