மேட்டூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

73பார்த்தது
மேட்டூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மேட்டூர் திட்டக் கிளை சார்பில் 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  
 இதில் 
மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
மின் வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய பணப்பலன்களை வழங்கிட கால தாமதம் செய்யக்கூடாது, அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நலநிதி ஐந்து லட்சம் மின்வாரியத்திற்கும் அமல்படுத்த வேண்டும்,
 நீண்ட காலமாக பதவி உயர்வு இல்லாமல் காத்திருக்கும் கம்பியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திட்டக் கிளை துணைத்தலைவர் பூராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி