சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்த மின் இணைப்பை பயன்படுத்தி அவர் மற்றொரு விவசாய கிணற்றிற்கு முறைகேடாக மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மின் திருட்டு தடுப்பு படையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ 75 ஆயிரத்து 637-க்கு மின் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் பெருமாளுக்கு சமரச தொகையாக ரூ. 3 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ. 78 ஆயிரத்து 637 அபராதம் விதித்தனர்.