மனைவி பிரிந்து சென்றதால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

51பார்த்தது
மனைவி பிரிந்து சென்றதால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம், செவ்வாய்பேட்டை பொன்னுசாமி பிள்ளைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). தள்ளுவண்டி வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி, கணவர் மாரியப்பனை பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மாரியப்பன் குழந்தைகளுடன் கொங்கணாபுரம் அருகே உள்ள எட்டிக்குட்டை மேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மாரியப்பன் இருந்து வந்ததாகத் தெரிகிறது. நேற்று(ஆக.27) வீட்டில் அவர் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தள்ளுவண்டி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி